50,000 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை!

Date:

13 மாவட்டங்களில் உள்ள 51,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வரட்சியினால் 13 மாவட்டங்களில் 171,781 நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால் 51,641 குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 70,000 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர், சங்கானைப் பகுதி ஜூன் மாதத்திலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...