வறட்சியால் நேர அடிப்படையில் நீர் விநியோகம்!

Date:

நிலவும் வறட்சியான நிலையை கருத்திற் கொண்டு 69,220 வாடிக்கையாளர்களுக்கு நேர அடிப்படையின்  கீழ் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிடுகையில், நேர அடிப்படையில்  நீர் விநியோகிக்கப்படும் சந்தர்ப்பங்களில், தேவை அதிகரிக்கும் போது, ​​குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியான நிலை தொடருமானால் தற்போது ஆபத்தில் இல்லாத நீராதாரங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என அனோஜா களுஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் மஹரகம உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 08.00 மணி முதல் நாளை அதிகாலை 02.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை, கட்டுபெத்த மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் உயர் அழுத்த மின் அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர்...