இந்தியாவிலேயே தொடர்ந்தும் இருப்பதைத் தேர்ந்தெடுத்ததே இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றுப் பிரகடனம்: மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் புகழாரம்!

Date:

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, இந்திய சுதந்திர தின நிகழ்வையொட்டி வெளியிட்டுள்ள டுவிட்டரில் தங்கள் தாயகத்தின் மீதான முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அழுத்திக் கூறியுள்ளார்.

துஷார் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், 1947 இல் நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகக் கருதப்படும் வகையில் இந்தியாவை தமது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்த முஸ்லிம்கள் வெளிப்படுத்திய தேசத்தின் மீதான ஆழ்ந்த அன்பை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

வரலாற்றுச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில், துஷார் காந்தி வெளியிட்ட டுவிட்டரில் “1947-ல் முஸ்லிம்கள் தங்களின் பிறப்பிடமும் தங்கள் மூதாதையர்களின் பூமியுமான இந்தியாவிலேயே தொடர்ந்தும் இருப்பதைத் தேர்ந்தெடுத்தனர். அதுவே அவர்களின் தாய்நாட்டின் மீதும் தேசபக்தியின் மீதும் கொண்ட அன்பின் பிரகடனம். இந்துக்களுக்கு ஒருபோதும் அப்படியானதொரு சத்தியசோதனை அமையவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் என்ற முறையிலும், அவரது மூதாதையரின் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர் என்ற வகையிலும் துஷார் காந்தியின் இந்தச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

Popular

More like this
Related

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...

‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால்...

எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய...

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட...