‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினை’

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமை நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கும் பாரிய பிரச்சினை என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

தற்போது காலவரையறையின்றி இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒரு தேர்தலையாவது நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஏதேனும் ஒன்றையாவது உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15க்கு முன்னதாக நடத்தலாம் என்றும் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளிட்டிருந்தார்.

மேலும், மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் ஆணை எதுவுமின்றி, ஆளுநர்கள், செயலாளர்கள் மற்றும் ஆணையர்களால் நாட்டை ஆளுவது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நினைவுபடுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...