ஊவா வெல்லஸ்ஸ கல்விச் செயற்பாடுகள் 21 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

Date:

தற்போது காலவரையறையின்றி மூடப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு அனைத்து பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக விடுதிகளில் பயிலும் மாணவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் தங்களுடைய விடுதிகளுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தின் அனைத்து பீடங்களின் கற்கைகளும் இம்மாதம் 28ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு அனைத்து பீட மாணவர்களுக்கும் செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு படிப்பு விடுமுறை வழங்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...