எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பாக தடயவியல் தணிக்கை நடத்தப்படும்

Date:

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

“கேபிஎம்ஜி லிமிடெட், உள்ளூர் நிபுணர் நிறுவனம் தடயவியல் தணிக்கையை நடத்தும்,” என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த வருடம் இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் காணாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் அமரசேன தெரிவித்தார்.

“500 பெளசர்களில் இருந்த எரிபொருள் சேமிப்பிடம் இல்லாத இடத்தில் இறக்கப்பட்டது. ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிபிசியின் மூன்று அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தடயவியல் தணிக்கை மூலம் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...