எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பாக தடயவியல் தணிக்கை நடத்தப்படும்

Date:

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

“கேபிஎம்ஜி லிமிடெட், உள்ளூர் நிபுணர் நிறுவனம் தடயவியல் தணிக்கையை நடத்தும்,” என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த வருடம் இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் காணாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் அமரசேன தெரிவித்தார்.

“500 பெளசர்களில் இருந்த எரிபொருள் சேமிப்பிடம் இல்லாத இடத்தில் இறக்கப்பட்டது. ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிபிசியின் மூன்று அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தடயவியல் தணிக்கை மூலம் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...