கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

Date:

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் மொத்தமாக 11,900 விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது 6,000 இற்கும் குறைந்த விரிவுரையாளர்களே இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் பணிபுரியும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் 6,300 ஆகக் குறைவடைந்ததாகவும் கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டடுள்ளது.

விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அரச பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரமன்றி நாட்டிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் 50 வீத வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், 2022ஆம் ஆண்டு புதிய மாணவர்களை இணைத்ததன் பின்னர் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...