தடையில்லா மின்சாரம் வழங்குவதை மின்சார சபை உறுதி செய்யும்: எரி சக்தி அமைச்சர்

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள நுகர்வோருக்கு தடையின்றி மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை உறுதி செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கான திட்டம் எதுவும் இலங்கை மின்சார சபைக்கு இல்லை என தெரிவித்தார்.

மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்கு தேவையான மேலதிக மின்சாரத்தை இலங்கை மின்சார சபை கொள்வனவு செய்யும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நீர் விநியோக முறைக்கு சரியான தீர்மானம் எட்டப்படவில்லை இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...