தாய்லாந்தில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் சஷொன்சொ மாகாணம் மியோங் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அதிகாலை குறித்த கார் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த சரக்கு ரயில், கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.