திருகோணமலை விமான விபத்து: 1958இல் தயாரிக்கப்பட்ட பழைய விமானங்களை பயன்படுத்தும் இலங்கை!

Date:

இலங்கையில் PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 06 விமானிகள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 1958ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களை தொடர்ந்தும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையில் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டவையாகும். அவற்றின் இயந்திரங்கள் 1961இல் தயாரிக்கப்பட்டவை. சீனாவில் இருந்தே இந்த விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த விமானங்கள் தயாரிக்கப்பட்ட தருணத்தில் நாம் பிறந்திருக்கவும் இல்லை. இந்த பழைய விமானங்களை பயிற்சிக்காக பயன்படுத்துவது நியாயமற்றது மற்றும் வருந்தத்தக்கது. அவற்றை பயிற்சிக்காக பயன்படுத்தாமல் அருங்காட்சியகங்களிலேயே வைக்க வேண்டும்.

விபத்துகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதில்லை. இவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்? அரசாங்கம் இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.தொடர்ந்து இவற்றை பயன்படுத்தி எமது விமானிகளை பலிகொடுக்க முடியாது” என்றார்.

விமானப் படைக்குச் சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப் படைத் தளத்தின் சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...