நாடளாவிய ரீதியில் முழு நேர நீர் விநியோகத்தில் சிக்கல்!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை வழங்குவது சவாலாக மாறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 344 நீர் விநியோக நடவடிக்கைகளில் 20 முழு நேர நீர் விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு நேர அட்டவனை (Shift) அடிப்படையில் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி,குருநாகல், ஹெட்டிபொல, நிக்கவெரடிய, வாரியபொல, மாத்தறை – ஊருபொக்க ஹம்பாந்தோட்டை – பெலிஅத்த, முருத்தவெல, தங்கல்ல, வலஸ்முல்ல, அக்கறைப்பற்று, பொத்துவில், திருக்கோயில், மொனராகலை, பிபிலை, அம்புகஸ்துவ, பண்டாரவளை, ஹல்தும்முல்ல, போகஹாகும்புர, கந்தேகெடிய, சீலதெடிய, அமுனுகெலே, கெப்பெட்டிபொல ஆகிய பகுதிகளில் நீர் வழங்கல் அமைப்புகளில் கண்காணிப்பு முறையின் கீழ் கட்டுப்பாடுகளுடன் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையால் இதுவரை நாட்டில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ், கட்டுப்பாட்டில் உள்ள 73 மஹாவரி வர்த்தக நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் செயற்றிறன் நீர் கொள்ளளவு 30% வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...