நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 50 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 50 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 500 பேர் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் பெரும்பான்மையானவர்கள், வடக்கு, கிழக்கு, ஹம்பாந்தோட்டை, பதுளை, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வாழ்கின்றனர்.

நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதியில் இருந்து குடிநீர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு தண்ணீர் தாங்கி கொள்கலன் வண்டிகள் மூலம் குடிநீரை விநியோகித்து வருவதாகவும் மேஜர் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...