பங்களாதேஷிடம் பெற்ற கடனில் ஒரு பகுதியை திருப்பி செலுத்தியது இலங்கை!

Date:

இலங்கை, பொருளாதார நெருக்கடியுடன் போராடிக்கொண்டிருந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று பொறிமுறையின் கீழ் பெற்ற 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷிற்கு நேற்று செலுத்தியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளால் முதல் தவணை செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் வங்கியின் (BB) செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque, கடந்த வாரம் ஒகஸ்ட் 17 ஆம் திகதி தவணை பெறப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த தொகை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த மாதத்திற்குள் இரண்டாவது தவணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என மத்திய வங்கியின் நிர்வாக பணிப்பாளர் ஹக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2021 செப்டெம்பரில் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்த தெற்காசியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பங்களாதேஷ் தனது வெளிநாட்டு இருப்பில் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை இலங்கைக்கு வழங்கியது.

 

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...