பதிவு செய்யப்படாத NGOக்கள் பணிபுரிய அனுமதி இல்லை!

Date:

பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் பணிபுரிய அனுமதி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில்கொண்டு காலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு காலி உதவி மாவட்ட செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

உதவி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டத்தில் பங்கேற்காத நிறுவனங்களின் பதிவுகளை இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் தகவல்களை தேசிய செயலகத்திற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காலி உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிக்கல் நிலைமைகள் காரணமாக பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் செயற்படுவதற்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...