பதுளை போதனா வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை மீள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 கோடி ரூபா நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த நிலையில், நேற்றைய தினம் (10) வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (10) பிற்பகல் வைத்தியசாலை நிர்வாகம் 20 மில்லியன் ரூபாவை செலுத்தியதாகவும், மிகுதித் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாக எழுத்துமூலம் அறிவித்ததையடுத்து, மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சார துண்டிப்பு காரணமாக வைத்தியசாலைக்கு வருகைத்தந்த நோயாளர்பள் சில அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.