பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய விசேட குழு!

Date:

திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானமொன்று சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப்படைத் தளத்தின் சீனக்குடா முகாம் அமைந்துள்ள பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை விமான படையின் சீனக்குடா பொறியியல் பீடத்தில் இலக்கம் 1 பயிற்சித்தளத்தில் விமானிகளை பயிற்சியளிக்க பயன்படுத்தப்பட்ட PT 6 வகைகயைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமான சோதனைக் கடமைகளுக்காக பயணித்த விமானி மற்றும் பொறியியலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 11.25 இக்கு புறப்பட்ட குறித்த விமானம், 11.27 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...