புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையால் பயணிகள் பாதிப்பு

Date:

புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் நேற்று (22) இரவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திடீர் தொழிற்சங்க நடவடிக்கையினால், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கு தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை புகையிரத பிரிவில் நேற்று இரவு 7 மணியளவில் புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் மீது அதே பிரிவில் சேவை செய்யும் இன்னுமொரு ஊழியர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமையை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் சேவைகளிலிருந்து நீங்குவதற்க்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக இரவு நேர தபால் புகையயிரதம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

எவ்வாறாயினும் இரவு 9 மணியளவில் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...