மட்டக்குளியில் பதற்றம் : ஒருவர் படுகொலை!

Date:

மட்டக்குளி – பர்கியூசன் வீதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சில குழுக்களுக்கு இடையில் கடந்த இரு வாரங்களாக முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை குறித்த தோட்டத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் இனவாத ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்..

இதேவேளை குறித்த மோதலில் மேலும் சில இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பில் மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும், குறித்த பகுதிக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க அவர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...