வறட்சியான காலநிலையால் சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Date:

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு – சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களிடையே நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுவர்களுக்கு அதிகளவான திரவங்களை வழங்க வேண்டுமென வைத்தியர் பிரிந்துரைத்துள்ளார்.

மேலும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சிறுவர்களிடையே பரவக்கூடுமெனவும் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...