வறட்சியான பகுதிகளில் குடிநீர் விற்பனை அதிகரிப்பு!

Date:

கடும் வறட்சியான காலநிலையால் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், வறண்ட பகுதிகளில் தண்ணீர் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற கடுமையான வறண்ட காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே நீர் விற்பனை அதிகமாக இடம்பெறுகின்றது.

அந்த இடங்களில் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குடிநீர் விற்கப்படுகிறது.

இங்கு கிணற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குடிநீரை பரிசோதிக்கும் உரிமை பொது சுகாதார பரிசோதகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடிநீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கூட பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்து பொருத்தமான நிலையில் இருந்தால் அனுமதி வழங்குவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், இந்நாட்களில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளதால், சிலர் சுத்திகரிக்காமல் தண்ணீரை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...