வெள்ளவத்தை உதைப்பந்தாட்ட மோதல்: ஐவருக்கு விளக்கமறியல்!

Date:

வெள்ளவத்தை குரே மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை உதைப்பந்தாட்ட போட்டியின் போது பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐந்து பேரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (08) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஐந்து சந்தேக நபர்களும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கல்கிசை நீதவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.

பொரளை வெஸ்லி கல்லூரி மற்றும் மருதானை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி வெள்ளவத்தை குரே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதியில் போட்டியை பார்வையிட வந்த பார்வையாளர் குழுவுக்கும், மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சுமார் 40 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட ஐவரும் வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...