அரச நிறுவனங்களின் மீதான இணையத் தாக்குதல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

Date:

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை அலுவலகங்கள் உட்பட பல அரச நிறுவனங்கள் மீது கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உட்பட 300 அரச நிறுவனங்களின் சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளின் தரவுகள் காணாமல் போயுள்ளதக தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலே, இணையத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, இணையத் தாக்குதல் தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம், இலங்கை கணினி அவசர பதில் மன்றம் ஆகியவற்றிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...