இரண்டு ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

Date:

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (13) காலை சுமார் 40 அலுவலக ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

கொழும்பு கோட்டைக்கு 15 காலை ரயில் பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 ரயில் பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை 4 ரயில் பயணங்களும், கரையோரப் பாதையில் 17 ரயில் பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன..

அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக தூர மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு நேர அஞ்சல் ரயிலை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...