இளவரசி டயானாவுடன் விபத்தில் கொல்லப்பட்ட காதலரின் தந்தை முகமது அல் ஃபயீத் மரணம்

Date:

பிரபல கோடீஸ்வரர் முகமது அல் ஃபயீத் தனது 94வது வயதில் காலமானார்.

எகிப்தில் கடந்த 1929ஆம் ஆண்டு பிறந்தவர் முகமது அல் ஃபயீத். இத்தாலி மற்றும் மத்திய கிழக்கில் தொழில் செய்த அவர் 1960 களில் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.

அங்கு மிகப்பெரிய கோடீஸ்வர தொழிலதிபராக உயர்ந்தார். இந்த நிலையில் 94 வயதான முகமது லண்டனில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று அவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.முகமது உலகளவில் அனைவருக்கும் தெரிந்த நபராக மாற மற்றொரு காரணம் உண்டு.

ஏனெனில், இவரின் மகன் தோதி அல் ஃபயத், பிரித்தானிய இளவரசி டயானாவும் கார் விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி உயிரிழந்தனர்.

டயானாவும், தோதியும் காதலித்து வந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் முகமது கூறுகையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப்பின் சூழ்ச்சித் திட்டத்தில் தான் தோதியும் டயானாவும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

ஏனெனில் டயானா ஒரு எகிப்தியருடன் டேட்டிங் செய்வது பிடிக்காததால் அரச குடும்பம் விபத்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர் நம்பினார்.

டயானா கர்ப்பமாக இருந்ததாகவும், தோதியை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டதாகவும், இளவரசி இஸ்லாமியரை திருமணம் செய்வதை அரச குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் முகமது அல்-ஃபயத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...