‘ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றும் தேவையில்லை’

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணை இலங்கைக்கு அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு மற்றும் உடலகம் ஆணைக்குழு என்பன சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தை நாடவேண்டிய அவசியமில்லை என சட்டத்தரணி சரத் கோன்கஹகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் சேனல் 4 புலம்பெயர் நாடுகளின் உதவியுடன் இலங்கை மற்றும் இலங்கையர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதற்காக இதனைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு முறையும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் போது இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேபோன்று இம்முறையும் சேனல் 4 அவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...