உத்திக பிரேமரத்ன எம்.பி. மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்

Date:

பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று இரவு 10.40 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அனுராதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது வேலைகளை முடித்துகொண்டு வீடு திரும்பும் வேளையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அப்போது காரில் உத்திக பிரேமரத்ன மட்டுமே இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரின் இடதுபக்கம் பின் இருக்கையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, இதுதொடர்பிலான விசாரணைகள் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...