சமையல் எரிவாயு விலை இன்று அதிகரிக்கும் சாத்தியம்?

Date:

சமையல் எரிவாயு விலை இன்று அதிக விகிதத்தால் அதிகரிக்கப்படலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், புதிய விலை தொடர்பில் இன்று முற்பகல் அறிவிக்கப்படுமெனவும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை சுமார் 105 டொலராக அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயுன் நிறுவனத் தலைவர் முஜித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலங்களை விட அதிகமான விலை அதிகரிப்பாக இது அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, கடந்த மாதம் 4ஆம் திகதியளவில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...