தோட்டக்காட்டான்’ சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம்: முரளி படத்தில் இடம்பெறும் வார்த்தைக்கு மனோ கண்டனம்

Date:

800 படத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவரவுள்ள 800  படத்தின் முன்னோட்ட காணொளியில் “தோட்டக்காட்டான்” என்ற சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் இடம்பெற்றிருந்தது.

“இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில்,  தடை செய்யப்பட்ட  வார்த்தையை உங்கள் பட முன்னோட்டத்தில்  பயன்படுத்த வேண்டாம்.

அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம். நானே ஒரு கதாசிரியர்.

எனக்கு இது தெரியும். அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று பயன்படுத்துங்கள், சரியாக வரும்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...