நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெவட்டகஹ பள்ளிவாசலின் கொடியேற்றம்!

Date:

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

அண்ணல் நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெவட்டகஹ செய்யக் உஸ்மான் வலியுல்லாஹ் தர்ஹா மற்றும் பள்ளிவாசலின் கொடியேற்றம் அண்மையில் பெருந்திரளானவர்களின் பங்கு பற்றுதலுடன்  இடம்பெற்றுள்ளது.

தெவட்டகஹ பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த செய்யத் அப்துல் கரீம் தங்கள், பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், கலாநிதி ஹஸன் மெளலானா உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் மாலை இடம் பெற்ற கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து நபியவர்களின் பெயரில் மெளலீது நிகழ்வு ஆரம்பமானது.

குறித்த மெளலீது வைபவம் 12 தினங்களுக்கு மாலை மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து இடம் பெறும் எனவும் நபி பிறந்த தினமான எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதான தமாம் வைபவம் இடம் பெறும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...