நாட்டின் 70 வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் இன்று முடங்கும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள 70க்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக மதிய உணவு நேரத்தில் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன தெரிவித்துள்ளன.

நாட்டின் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை காரணமாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உயர்தர சுகாதார சேவைகளை உருவாக்க போராட்டத்தின் ஊடாக அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றும் நாளையும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. “சுகாதார சேவைகள் ஆபத்தில்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

நாட்டு மக்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் வைத்தியர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...