நாட்டின் 70 வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் இன்று முடங்கும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள 70க்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக மதிய உணவு நேரத்தில் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன தெரிவித்துள்ளன.

நாட்டின் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை காரணமாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உயர்தர சுகாதார சேவைகளை உருவாக்க போராட்டத்தின் ஊடாக அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றும் நாளையும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. “சுகாதார சேவைகள் ஆபத்தில்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

நாட்டு மக்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் வைத்தியர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...