பங்களாதேஷுக்கு 100 மில்.டொலர்களை திருப்பி செலுத்தியது இலங்கை

Date:

2021ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இலங்கை கடனாக பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியனை மீள செலுத்தியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு மூன்று தவணைகளில் செலுத்தும் வகையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷ் இலங்கைக்கு கடனாகக் கொடுத்தது.

இலங்கை குறித்த கடனை விரைவாக செலுத்த வேண்டுமென அண்மையில் பங்களாதேஷ் அறிவித்திருந்த நிலையில், ஓகஸ்ட் 17ஆம் திகதி முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பிச் செலுத்தியது.

இரண்டாவது கட்டமாக நேற்று 100 மில்லியன் டொலர்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 50 மில்லியன் டொலர்கள்  இம்மாத இறுதிக்குள் இலங்கை செலுத்துமென பங்களாதேஷ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பங்களாதேஷுடன் நாணய பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, வழங்கப்படும் கால எல்லையின் பின்னர் இலங்கை மூன்று மாதங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...