புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை!

Date:

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட புலத்சிங்கள ஹல்வத்துறை தமிழ் வித்தியாலயம், பரகொட கித்துல கொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மேல் வெல்கம கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம், வெள்ள அபாயம் குறையும் வரை சிறுவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...