பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் 5 பேர் கைது!

Date:

பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொரளையில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடி விற்பனை நிலையத்தின் பணியாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் ஒரு பெண் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும் பொரளையில் உள்ள விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

விற்பனை நிலையத்திலிருந்து பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகும் வரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்பொருள் அங்காடி நிர்வாகமும் முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...