போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் பியானோ வாசித்த பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!

Date:

நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து மகிழ்வித்த அதிகாரி ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த எதிர்ப்பாளர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட நாளில் பாதுகாப்பிற்காக கான்ஸ்டபிள் தயாரத்ன நியமிக்கப்பட்டார்.

இதன்போது ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்த பியானோவில் அமர்ந்து, அதன் அறைகள் வழியாக சென்றுகொண்டிருந்த மக்களுக்கு பாடலை இசைத்திருந்தார்.

“கட்டிடத்தை சேதப்படுத்தும் போது தயாரத்ன பியானோ வாசித்துக் கொண்டிருந்தார்” என்று பெயர் வெளியிடாத ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கான்ஸ்டபிள் ஒழுக்கத்தை மீறியதாக பொலிஸ் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

ஜூலை 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகை தாக்கப்படுவதற்கு முன்பு, கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி பல மாதங்களாக எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டிருந்தனர்.

எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர், பின்னர் அங்கிருந்த நீர் தடாகத்தில் உல்லாசமாக இருப்பதையும், ராஜபக்சவின் படுக்கையில் அறையில் மகிழ்ச்சியாக இருந்தமையையும் காண முடிந்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை திருப்பி கொடுத்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...