தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சர்வமதத் தலைவர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல்!

Date:

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தர்மநிலையத்தின் விஹாராதிபதி கலாநிதி எல்லே குணவன்ச நாயக்க தேரர் தலைமையில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் விஷேட கலந்துரையாடலொன்று நே‌ற்று (20) நடைபெற்றது.

இக்கலந்துறையாடலில் கலாநிதி எல்லே குணவன்ச நாயக தேரர், சிவ ஸ்ரீபாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நிஷான் குரே பாதிரியார் உட்பட பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கை நாட்டை கட்டியெழுப்பும் வண்ணம் மதங்களுக்கு இடையே மத நல்லுறவையும் தேசிய ஐக்கியத்தையும் பேணுவதில், சர்வமத அமைப்பினரின் பங்கு முக்கியம் என்பதை பற்றியும், அதன் விரிவான திட்டங்கள் பற்றியும் விஷேடமாக ஆலோசிக்கப்பட்டது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...