மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் :தனுஷ்க

Date:

எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைகிறேன், மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டபோது, அவருக்கு தெரியாமல் ஆணுறையை அகற்றிய குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய சிட்னி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தனுஷ்க  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது.

நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது.எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...