யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்: ஐவர் காயம்!

Date:

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் வீடொன்றின் மீது இன்று (16) அதிகாலையில் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டிலிருந்து யுவதியொருவரை காதலித்த நபரொருவராலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றில் மீது இன்று அதிகாலை 4.20 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன் ஒருவரும், அவருடன் வந்த குழுவினருமே தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய பின்னர், வீட்டுக்குள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.

உரும்பிராயை சேர்ந்த இளைஞன், அந்த வீட்டிலுள்ள யுவதியில் ஒரு தலைக்காதல் கொண்டிருந்ததாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...