வைத்தியர் ஒருவரை உருவாக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 4 மில். ரூபா ஒதுக்கப்படுகிறது’

Date:

இந்நாட்டில் வரி செலுத்தும் மக்களின் பணத்தில் வைத்தியர் ஒருவரை உருவாக்குவதற்கு சுமார் நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” மருத்துவ மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு கல்வியை நிறைவு செய்வதற்கு மக்களின் பணத்தில் இருந்து 40 இலட்சத்து 92,915 ரூபாய் செலவிடப்படுகிறது.

இது மாதாந்த அடிப்படையில் 68,215 ரூபாவாகும். வரி செலுத்துவோர் பொறியியல் மாணவர் ஒருவருக்கு 2.1 மில்லியன் ரூபாவும், முகாமைத்துவ மாணவருக்கு 1 மில்லியன் ரூபாவும், கலைத்துறை மாணவர் ஒருவருக்கு 1.3 மில்லியன் ரூபாவும் வரி செலுத்தும் மக்களின் பணத்திலிருந்து ஒதுக்கப்படுகிறது. ” என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...