அதிக செலவு செய்யும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆய்வு செய்ய தீர்மானம்

Date:

அதிக செலவு செய்யும் பத்து அமைச்சுக்களின் செலவுகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி, இது தொடர்பான அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கை தொடர்பான தனது அரசாங்கத்தின் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் அமைப்பில் ஒரு தேசிய கொள்கை இல்லாதது மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பின்னடைவு போன்ற ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எங்களிடம் நிலையான கொள்கைகள் இருக்க வேண்டும். தேசிய கொள்கைகள் குறித்த அறிக்கையை வழங்கிய குழு ஒன்றை பாராளுமன்றம் நியமித்துள்ளது. இந்த தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் அதிகாரப்பகிர்வு நடைபெறலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்கக் கட்டமைப்பின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...