அதிக செலவு செய்யும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆய்வு செய்ய தீர்மானம்

Date:

அதிக செலவு செய்யும் பத்து அமைச்சுக்களின் செலவுகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி, இது தொடர்பான அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கை தொடர்பான தனது அரசாங்கத்தின் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் அமைப்பில் ஒரு தேசிய கொள்கை இல்லாதது மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பின்னடைவு போன்ற ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எங்களிடம் நிலையான கொள்கைகள் இருக்க வேண்டும். தேசிய கொள்கைகள் குறித்த அறிக்கையை வழங்கிய குழு ஒன்றை பாராளுமன்றம் நியமித்துள்ளது. இந்த தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் அதிகாரப்பகிர்வு நடைபெறலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்கக் கட்டமைப்பின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...