அரகலய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு பெருந்தொகை இழப்பீடு !

Date:

அரகலய போராட்டத்தின் போது சேதப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உடமைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை 1,414 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

31 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே 714 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூலை 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் அன்றைய ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், உடைமைகள் தீயிட்டு நாசமாக்கப்பட்டன.

இவ்வாறு சொத்துக்களை இழந்த உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்க உள்விவகார அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்ற விவகாரப் பிரிவு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி 31 உறுப்பினர்களுக்கு 714 மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 700 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த மேலதிக ஏற்பாட்டை பெறுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நட்டஈடு வழங்குவதற்கு மேலும் 200 மில்லியன் ரூபா தேவைப்படும் என்றும் பாராளுமன்ற விவகாரப் பிரிவு வலியுறுத்துகிறது.

இதேவேளை, போராட்டத்தின் போது சொத்துக்கள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லாத 73 உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் பிரஜைகளுக்கு 519 மில்லியன் ரூபா நஷ்டஈடாக அரசாங்கம் வழங்கியுள்ளது.

அந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது இழப்பீட்டு அலுவலகத்தால் செய்யப்படுகிறது.
அவர்களுக்கு வழங்க வேண்டிய மீதி இழப்பீடு எதிர்காலத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...

விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...

காவி உடையை தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான...