இறக்குமதி தடைகள் விரைவில் நீக்கப்படும்: பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

Date:

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனவே ,எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்ததன் பின்னர், வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை திறந்த பொருளாதார கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதால் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பை கருத்திற்கொண்டே, இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலைமையில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

எதிர்வரும் காலப்பகுதியில் அந்நிய செலாவணியின் கையிருப்பின் அடிப்படையில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...