இலங்கையைச் சேர்ந்த காணொளி வடிவமைப்பாளரும் புகைப்பட கலைஞருமான முஹம்மத் ஸைத்க்கு (Mohamed Zaidh) சவூதி அரேபிய இளவரசர் ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து (President of the ICRE) பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த ஜுலை மாதம் 01 ஆம் திகதி சவூதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான ‘பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா’ (Crown Prince Camel Festival) ஆரம்பமானது.
இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள் வருகைத்தந்து, ஆரம்ப கட்டங்களுடன் 350 போட்டிகள் நடாத்தப்பட்டன.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப்போட்டி நிகழ்ச்சியில் காணொளி வடிவமைப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத் (Mohamed Zaidh) அவரது சேவையை பாராட்டி சவூதி அரேபிய இளவரசர் ஃபஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து சேவை பாராட்டு சான்றிதழும் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவை காண சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரவர் பக்கீர் அம்சா (Pakeer Amza) அவர்களும் வருகைத் தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையை தளமாகக் கொண்ட NEWSNOW.LK யின் முன்னாள் தயாரிப்பாளரான Mohamed Zaid அவர்களுக்கு Newsnow குழுமத்தின் வாழ்த்துக்களும் பாராட்டும் உரித்தாகட்டும்!