ஈஸ்டர் தாக்குதலுக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை: அனுரகுமார

Date:

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்று ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான எந்த விசாரணை அறிக்கையிலும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த இரண்டு பேரின் தந்தையான வர்த்தகர் இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி உரையாற்றிமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டு புஷ்வானமே அன்றி உண்மையான வெடியல்ல.

இப்ராஹிமுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் சட்டத்தரணியாக அலி சப்றியே முன்னிலையாகி இருந்தார்.

அவருக்கு சட்டத்தரணியாக இருந்தார் என்பதற்காக அலி சப்றிக்கு பயங்கரவாத செயலுடன் தொடர்புள்ளது என கூற முடியாது.

இப்ராஹிம் ஒன்றரை இரண்டு வருடங்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் போது கூட மக்கள் விடுதலை முன்னணிக்கும் தாக்குதலுக்கு தொடர்புள்ளமைக்கான எவ்வித விடயங்களும் வெளியாகவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...