ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளாத அமைச்சர்கள்!

Date:

பாராளுமன்றத்தில் நடந்து வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொள்ளவில்லை.

இவர்கள் முக்கியமான இந்த விவாதத்தில் கலந்துக்கொள்ளாதது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் விரிவாக விடயங்களை வெளியிட்டு வந்தனர்.

குறிப்பாக சோனிக்-சோனிக் என்ற வார்த்தையை ஹரின் பெர்னாண்டோவே பாராளுமன்றத்தில் வெளிக்கொண்டு வந்தார்.

இதனடிப்படையில் இன்று நடைபெறும் விவாதத்தில் இவர்கள் இருவரும் கலந்துக்கொள்வார்கள் என பலர் எதிர்பார்த்த போதிலும் அவர்கள் விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...