ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளாத அமைச்சர்கள்!

Date:

பாராளுமன்றத்தில் நடந்து வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொள்ளவில்லை.

இவர்கள் முக்கியமான இந்த விவாதத்தில் கலந்துக்கொள்ளாதது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் விரிவாக விடயங்களை வெளியிட்டு வந்தனர்.

குறிப்பாக சோனிக்-சோனிக் என்ற வார்த்தையை ஹரின் பெர்னாண்டோவே பாராளுமன்றத்தில் வெளிக்கொண்டு வந்தார்.

இதனடிப்படையில் இன்று நடைபெறும் விவாதத்தில் இவர்கள் இருவரும் கலந்துக்கொள்வார்கள் என பலர் எதிர்பார்த்த போதிலும் அவர்கள் விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...