எஹலியகொட அல் அக்ஸா கல்லூரியின் பாடசாலை ஊடகக் கழகம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் எப்.எம்.காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (ஓய்வு) அஷ்.என்.எம்.மிப்லி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஊடகக் கழக மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்றை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும் நாடறிந்த ஊடகப் பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் நடத்தினார்.
நடப்பு வருட ஊடகக் கழக அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அல்ஹாஜ் நுஸ்கி சரீபினால் வழங்கி வைக்கப்பட்டது.