கப்பல்களில் ஏற்படும் எண்ணெய் கசிவை கண்டறிய உதவும் பிரான்ஸ் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்டறியும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடல்பரப்புக்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.

இந்த நிலைமையானது இலங்கையின் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சுழல் அமைப்பை கடுமையாக பாதித்தது.

இந்த நிலையிலே, நிலைமைகளை கண்காணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...