சவூதி அரேபிய தூதரகம் நடத்தி வரும் கண் சிகிச்சை முகாம் 16 ஆம் திகதி வரை!

Date:

உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பங்களைப் போக்கும் வகையிலான சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையில், இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், முடிக்குரிய இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமான அதிமேதகு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் ஸஊத் மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினதும் தயாள உத்தரவுகளின் கீழ் 2023 செப்டெம்பர் 07 முதல் 16 வரையான காலப்பகுதியில் இலங்கையில் பார்வைக் குறைபாட்டுக்கெதிரான தன்னார்வ திட்டத்தை செயல்படுத்துகிறது.

ஆயிரக்கணக்கானவர்களின் நோய்களைக் கண்டறிந்து அவர்களை மருத்துவச் சேவைகளை வழங்குதல், சத்திரசிகிச்சை மேற்கொள்ளல், சிகிச்சையளித்தல், மருந்துகள் வழங்குதல், கண்புரை அகற்றல் என வகைப்படுத்தல் நடைபெறுகின்றது.

அத்துடன் தேவையானவர்கள் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுவதோடு கண்ணாடிகள் மற்றும் லென்ஸுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதோடு சிகிச்சைக்கு வந்தவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு அறிவூட்டல்களும் நடத்தப்படுகின்றன.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...