சிறைச்சாலைகளில் பரவும் அம்மை நோய்: கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை!

Date:

சிறைச்சாலைகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயை விரைவாகக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளுக்கு உடனடியாக தடுப்பூசியை செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் கொழும்பு விளக்கமறியல் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதோடு சுமார் 20 கைதிகள் மற்றும் அதிகாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் அம்மை நோய் வெளி சமூகத்திற்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு விரைவில் தடுப்பூசியை செலுத்துவது சிறைச்சாலை திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...