சீரற்ற காலநிலையால் சந்திவெளி பகுதியில் வாகன விபத்து: இருவர் பலி!

Date:

(உமர் அறபாத் ஏறாவூர்)

வாழைச்சேனை பிரதான வீதியில் சந்திவெளி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்/போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேளையிலே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகம்மது இப்ராகிம் முகம்மது குசைன் (54) மற்றும் முகம்மது நுபைல் ஹிபா செரீன் (04) வயது சிறுமியும் இவ்விபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை நிலவிய வேளையிலே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...