சூட்கேஸில் இருந்து சடலம் மீட்பு: சீதுவையில் அதிர்ச்சி!

Date:

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சடலம் நீல நிற பயணப் பையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, அவர் 35 மற்றும் 40 வயது மதிக்கத்தக்கவர் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 5’8” உயரம் கொண்ட ஒரு ஆண், சிவப்பு நிற சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் கழுத்தின் வலது பக்கத்தில் 07 நட்சத்திரக் குறிகள் கொண்ட பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும், அவரது தலை மற்றும் தாடியின் இரு பக்கங்களிலும் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...